திருவிளையாடற்புராணம் பற்றிய குறிப்புகள்..!
TNPSC Tamil Notes Thiruvilayadal Puranam திருவிளையாடற்புராணம் பற்றிய குறிப்புகள்..! திருவிளையாடற்புரணம் புராணம் – பழைய வரலாறு. ★ மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்ற நூல் திருவிளையாடற் புராணம். ★ மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்களும் அமைந்துள்ளன. ★ இந்நூல் 3363 பாடல்களை கொண்டுள்ளது. ★ பெரிய புராணத்திற்கு அடுத்ததாகப் பெருமை பெற்று விளங்குவது. ★ இந்நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணத்தையும், வடமொழி நூலாகிய “ஆலாசிய மாகாத்துமியம்” என்னும் நூலையும் தழுவி எழுதப்பட்டது. ★ இது. 3 காண்டம், 64 படலம், 3363 பாடல்கள் தொடை நயமும், பக்திச்சுவையும் மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையெழுதியுள்ளார். மேற்கோள்கள் : “இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் என்னா வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்” “தன்பால் ஆகிய குற்றம் தேரான்” “ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனை...