ஐங்குறுநூறு பற்றிய குறிப்புகள்..!
ஐங்குறுநூறு பற்றிய குறிப்புகள்..!
Notes on the Ainkurunuru..!
TNPSC Tamil Notes - Ainkurunuru
ஐங்குறுநூறு நூற்குறிப்பு :
★ ஐங்குறுநூறு : ஐந்து + குறுமை + நூறு
★ ஆசிரியர்: எண்ணிக்கை 5
★ பாடல் எண்ணிக்கை : 500
★ எல்லை : 3-6
★ பொருள் : அகம்
★ தொகுத்தவர் : புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
★ தொகுப்பித்தவர் : யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
★ கடவுள் வாழ்த்து பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்
★ தெய்வம் : சிவன்
★ மூன்றடிச்சிறுமையும், ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூலாகும்.
★ திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்த திணைக்கு ஐந்நூறு பாடல்கள் உள்ளளன.
திணைப்பாடல்கள் ஆசிரியர்கள்:
★ குறிஞ்சி கபிலர்
★ முல்லை பேயனார்
★ மருதம் ஒரம் போகியார்
★ நெய்தல் அம்மூவனார்
★ பாலை ஓதலாந்தையார்
இச்செய்தியை
“மருதமே ரம்போகி நெய்த லம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு”
என்னும் பாடல் உணர்த்துகின்றது.
★ இந்திர விழா குறித்து இந்நூல் கூறுகிறது.
மேற்கொள்கள்:
“நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க”
“பால்பல ஊறுக பகருபல சிறக்க”
“பகைவர்புர் ஆர்க பார்ப்பார் ஒதுக”
“பசியில் லாகுக பிணிசேண் நீங்குக”
“வேந்துபைக தணிக யாண்டுபல நந்துக”
எனப் புலவர் ஓரம்போகியார் “வேட்கைப்பத்து” என்னும் தலைப்பிலுள்ள
★ பத்துப்பாடல்களில் சிறந்த உலகியல் கருத்துகளை அமைத்துப் பாடியுள்ளார்.
நாணிலை மன்ற பாண நீயே
கோணேர் இலங்குவளை நெகிழ்த்த
கானலந் துறைவற்குச் சொல்லுகுப் போயே
★ இவ்வாற செறிவுமிக்க சிறிய பாடல்களடங்கிய இந்நூலுக்கு ஒளவை ச.துரை சாமிப்பிள்ளை உரையெழுதியுள்ளார்.
“பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலந்திற் றகுகுவென் மாதே” – ஓதலாந்தையார்
Comments
Post a Comment