திருவிளையாடற்புராணம் பற்றிய குறிப்புகள்..!
TNPSC Tamil Notes
Thiruvilayadal Puranam
திருவிளையாடற்புரணம்
புராணம் – பழைய வரலாறு.
★ மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்ற நூல் திருவிளையாடற் புராணம்.
★ மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்களும் அமைந்துள்ளன.
★ இந்நூல் 3363 பாடல்களை கொண்டுள்ளது.
★ பெரிய புராணத்திற்கு அடுத்ததாகப் பெருமை பெற்று விளங்குவது.
★ இந்நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணத்தையும், வடமொழி நூலாகிய “ஆலாசிய மாகாத்துமியம்” என்னும் நூலையும் தழுவி எழுதப்பட்டது.
★ இது. 3 காண்டம், 64 படலம், 3363 பாடல்கள் தொடை நயமும், பக்திச்சுவையும் மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையெழுதியுள்ளார்.
மேற்கோள்கள் :
“இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் என்னா
வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்”
“தன்பால் ஆகிய குற்றம் தேரான்”
“ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக் காய்ந்த
நாவலன் இம்மெனத் திரவுருக் கரந்தான்.
Comments
Post a Comment