எட்டுத்தொகை நூல்கள் எது?
எட்டுத்தொகை நூல்கள் எது?
Tamil Literary Encyclopedia,
எட்டுத்தொகை நூல்கள்:
★ எட்டுத்தொகை (Eight Anthologies) என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.
★ இது சங்க இலக்கியத்தில் ஒன்று.
★ இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல கால கட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக் கப்பட்டது.
★ இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை.
★ அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப் பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது.
★ இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உண்டு.
★ ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.
★ எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப் பாவால் அமைந்து,
★ சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன.
★ இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர்.
★ இது தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.
எட்டுத்தொகை நூல்கள் :
★ நற்றிணை
★ குறுந்தொகை
★ ஐங்குறுநூறு
★ பதிற்றுப்பத்து
★ பரிபாடல்
★ கலித்தொகை
★ அகநானூறு
★ புறநானூறு
எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை"
இவற்றுள்,
★ அகப்பொருள் பற்றியவை:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
புறப்பொருள் பற்றியவை :
★ புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வருவது:
★ பரிபாடல்.
★ அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன.
★ புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.
Comments
Post a Comment