குறுந்தொகை பற்றிய குறிப்புகள்...!
குறுந்தொகை பற்றிய குறிப்புகள்...!
TNPSC Tamil Notes - kurunthogai
குறுந்தொகை நூற்குறிப்பு :
★ குறுந்தொகை : குறுமை + தொகை
★ ஆசிரியர் எண்ணிக்கை 205
★ பாடல் எண்ணிக்கை 400 + 1 (கடவுள் வாழ்த்து)
★ எல்லை 4-8
★ பொருள் அகம்
★ தொகுத்தவர் பூரிக்கோ
★ தொகுப்பித்தவர் தெரியவில்லை
★ கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
★ தெய்வம் முருகன்
★ குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
★ இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
★ இதில் கடவுள் வாழத்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
★ இந்நூலைத் தொகுத்தவர் . பாரதம் பாடிய பெருந்தேவனார்
★ இந்நூலுக்கு கடவுள் வாழத்துப் பாடியுள்ளார்.
★ இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
★ இந்நூல் வாயிலாகப் பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.
★ மேற்கோள்கள் / பாடல்வரிகள்
9ஆம் வகுப்பு
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
– தேவகுலத்தார்
12 ஆம் வகுப்பு (Old)
யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
– கபிலர்
திணை குறிஞ்சி
துறை – வரைவு நீட்டிய தலைமகனுக்கு தோழி கூறியது
கபிலர் பற்றி கூறியவர்கள்:
வாய்மொழிக் கபிலன் – கூறியவர்கள் நக்கீரன்
நல்லிசைக் கபிலன் – பெருங்குன்றூர்க் கிழார்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் – இங்கீரனார்
புலன் அழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன் – மாறோக்கத்து நப்பசலையார்
பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி இது.
Comments
Post a Comment