குறுந்தொகை பற்றிய குறிப்புகள்...!

குறுந்தொகை பற்றிய  குறிப்புகள்...!

TNPSC Tamil Notes - kurunthogai  

குறுந்தொகை நூற்குறிப்பு :

★ குறுந்தொகை : குறுமை + தொகை

★ ஆசிரியர் எண்ணிக்கை 205

★ பாடல் எண்ணிக்கை 400 + 1 (கடவுள் வாழ்த்து)

★ எல்லை 4-8

★ பொருள் அகம்

★ தொகுத்தவர்   பூரிக்கோ

★ தொகுப்பித்தவர் தெரியவில்லை

★ கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்

★ தெய்வம் முருகன்

★ குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.

★  இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 

★ இதில் கடவுள் வாழத்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன


★ இந்நூலைத் தொகுத்தவர் . பாரதம் பாடிய பெருந்தேவனார்

★  இந்நூலுக்கு கடவுள் வாழத்துப் பாடியுள்ளார். 

★ இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.

★ இந்நூல் வாயிலாகப் பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.

★ மேற்கோள்கள் / பாடல்வரிகள் 

9ஆம் வகுப்பு

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே


– தேவகுலத்தார்


12 ஆம் வகுப்பு (Old)

யாரும் இல்லை;தானே கள்வன்

தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?

தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே


– கபிலர்


திணை குறிஞ்சி

துறை – வரைவு நீட்டிய தலைமகனுக்கு தோழி கூறியது

கபிலர் பற்றி கூறியவர்கள்:

வாய்மொழிக் கபிலன் – கூறியவர்கள் நக்கீரன்

நல்லிசைக் கபிலன் – பெருங்குன்றூர்க் கிழார்

வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் – இங்கீரனார்

புலன் அழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன் – மாறோக்கத்து நப்பசலையார்


பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி இது.

Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!