தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

 தேம்பாவணி பற்றிய  குறிப்புகள் 

TNPSC Tamil Notes - Thembavani  தேம்பவாணி

★ தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர்

★ தேம்பா + அணி, தேம்பா என்பதற்கு “வாடாத” என்றும் அணி என்பதற்கு “மாலை” என்றும் பொருள். ஆகத் தேம்பாவணி என்பதற்கு “வாடாத மாலை” என்று பொருள்.


★ தேன் + பா + அணி, தேன் போன்ற பாக்களால் ஆன மாலை” என்றும் பொருள் கூறுவர்.


★ 20ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் சமயச்சார்பானவை.


★  இக்காப்பியமும் கிறித்துவச் சமயத்தைச் சார்ந்த நூல்.


★ 3 காண்டங்களையும், 36 படலங்களையும் 3615 பாடல்களையும் கொண்ட நூல்.


★ இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவராக கொண்ட பாடப்பட்ட நூல்.


★ சூசையப்பர் வரலாறு, அன்னை இறைமகன் பங்கு, பழைய, புதிய ஏற்பாட்டு வரலாற்று நிகழ்வுகள் இதன் அடிப்படையாகும்.


★ காப்பியத்தின் இலக்கணத்தை கூறும் தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல் காப்பியத்தில் அமையும் கிளைக்கதைகள் பற்றி ஏதும் கூறுவில்லை. 


★ இதில் ஏறக்குறைய 40 கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.


★ இல்லற வாழ்க்கையைவிடத் துறவற வாழ்க்கையை வலியுறுத்துகிறது.


★ காப்பியத் தலைவரையே தூது செல்பவராகக் காட்டியிருப்பது இதன் புதுமை.


★ காப்பியத் தலைவன் மண்ணுலகில் முடிசூட்டிக் கொண்டு வாழந்து முடித்துப் பின் விண்ணுலுகு செல்வான். 


★ இதன் கதைத் தலைவருக்கு முதலில் விண்ணுலகில் முடிசூட்டப்படுகிறது. 


★ பின் மண்ணுலகிலும் ஒர மன்னன் முடிசூட்டுகிறான்.


★ இறைவனின் முழு உருவ வழிபாட்டை ஏற்கிறது. 


★ “வேரிய கமல பாதம் வினையறப் பணிந்து போற்றி”, “கைகூப்பிக் கூறலுற்றான்” போன்ற தொடர்கள் இது தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட நூல் என்பதை உணர்த்துகிறது.


★ கிறிஸ்தவ கலைக்களஞ்சியமாக திகழும் நூல் இதன் சொற்களும், தொடர்களும், பொருள் போக்கும் தமிழ்ப்புலவர்ககும் கடினமான ஒன்றாக இருக்கிறது.


★ தமிழ் கற்பித்த ஆசிரியர் – சுப்ரதீக் கவிராயர்.

தொன்னூல் விளக்கம் – ஐந்திலக்கண நூல் (குட்டித் தொல்காப்பியம்)

தமிழ் அகராதியின் தந்தை – வீரமாமுனிவர்.


★  சின்னச்சீறா – பனு அகமது மரைக்காயர் (2145 பாடல்கள்)


★ தமிழின் முதல் அகராதி – சதுரகராதி (பெயர், பொருள், தொகை, தொடை)


★ தமிழின் முதல் ஏளன நூல்  – பரமாத் குருகதை


மேற்கோள்கள்

“நகைசெய் தன்மையின் அமபெழீஇ தாய்துகள்

பகைசெய் நெஞ்சமும் பற்றலும் ஒன்றுற


முகைசெய் மேனி தழுவி முத்திட்டலும்


குகைசெய் இன்பெழக் கோலமிட்டு ஒத்ததே”


 


இது அன்னை மரியாள் குழந்தை இயேசுவுக்கு முத்தமிட்ட காட்சியைக் கூறுகிறது.


Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!