கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!

கலித்தொகை பற்றிய  குறிப்புகள்..!

TNPSC Tamil Notes  Kalithogai 

கலித்தொகை நூற்குறிப்பு:

★ ஆசிரியர் எண்ணிக்கை : 5

★ பாடல் எண்ணிக்கை: 150

★ எல்லை : 11-80

★ பொருள் : அகம்

★ தொகுத்தவர் : நல்லந்துவனார்

★ தொகுப்பித்தவர் : தெரியவில்லை

★ கடவுள் வாழ்த்து பாடியவர் நல்லந்துவனார்

★ தெய்வம் : சிவன்

★ பா வகை : கலிப்பா

★ கலிப்பாவால் ஆன 150 பாடல்களைக் கொண்ட தொகை நூல் இது.

★ அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.


★ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்கலியே பரிபாட்டு ஆயிறு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர்.

★ இதில் கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்களும் இன்றும் கிடைக்கின்றன.

கலி பாடல்கள் ஆசிரியர்கள் : 

★ குறிஞ்சி 29 கபிலர்

★ முல்லை 17 நல்லுருத்திரன்

★ மருதம் 35 மருத இளநாகனார்

★ நெய்தல் 33 நல்லந்துவனார்

★ பாலை 35 பெருங்கடுக்கோ


★ கடவுள்வாழ்த்து 1.நல்லுந்துவனார்

முதலிலுள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியிலுள்ள நெய்தற்கலியையும் பாடி இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார் என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்.


★ கலிப்பா : கலித்தளை விரவித் துள்ளலோசை உடையதாய்த் தரவு, தாழிசை, அம்போதரங்கம், அராகம், தனிச்சொல், சுரிதகம் என்னம் உறுப்புகள் அமையச் சுவைபடப்பாடும் வகையாகும்.


★ நல்லுந்தவனார் இயற்றிய மாமலர் முண்டகம் எனத் தொடங்கும் நெயதல் திணைப்பாடல் முதன்மையான ஒன்றாகும்.

“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப்படுவது படறிந்தொழுகுதல்;

அன்பெனப் பவடுவத தன்கிளை செறாஅமை

பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”


★ கலித்தொகைப் பாடல்கள் உணர்ச்சி கொந்தளிப்பன உள்ளத்தைத் தொடுவன எனலாம்.


நல்லந்துவனார் வரலாறு: 

★ இவரது இயற்பெயர் அந்துவனார் என்பதாம். இப்பெயரின் முன் “ந” என்னும் சிறப்புடைச் சொல் சேர்த்து வழங்கப்படுதலால் இவர் சிறப்பை உணரலாம்.

Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்