சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்:
சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்..!
Tamil Literary Encyclopedia,
சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்..!
1. சங்க காலமும், சங்ககால நூலும் .
2. எட்டுத் தொகை நூல்கள் யாது ?
3. எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் .
1. சங்க காலமும், சங்ககால நூலும் :
★ கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள்.
★ இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.
★ எட்டுத்தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
" நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"
★ இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1.அகப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
1.நற்றிணை (Narrinai)
2.குறுந்தொகை (Kurunthokai)
3.ஐங்குறுநூறு (Ainkurunooru)
4.கலித்தொகை (Kalithokai)
5.அகநானூறு (Agananooru)
ஆகிய ஐந்து நூல்களும்,
2.புறப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
1.பதிற்றுப்பத்து (Pathirruppattu)
2.புறநானூறு (Purananooru)
ஆகிய இரண்டும்,
3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
1.பரிபாடல் (Paripadal)
ஆகிய ஒன்றும் அடங்கும்.
2. எட்டுத் தொகை நூல்கள் யாது ?
அகப்பொருள் பற்றிய நூல்கள் : 5
புறப்பொருள் பற்றிய நூல்கள் : 2
அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்: 1
5 + 2 + 1 = 8 எனஎட்டு நூல்கள் எட்டுத்தொகை நூல்களாகும்,
3. எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் :
★ எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐந்நூற்றுவர்.
★ இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம்,
★ இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள்.
★ பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள்.
★ இவர்களுடைய பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் .
★ பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில;
★ வள்ளல் தன்மையை பாராட்டுவன பல;
★ வருமையின் கொடுமையினை வருணிப்பன சில;
★ மாண்பதை வாழ வழிகாட்டுவன பல;
★ ஆணும் பெண்ணும் மனம் இணைந்து ஒழுகும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில;
★ வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில,
★ பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம் ,
Comments
Post a Comment