Posts

Showing posts from November, 2021

கொங்குநாடு பற்றிய குறிப்புகள்..!

Image
References about Kongunadu ..! கொங்குநாடு பற்றிய குறிப்புகள்..! By. Tamil Literary Encyclopedia, கொங்குநாடு: ★ கொங்குநாடு பற்றிய குறிப்புகள் சுமார் 2000 ஆண்டு கட்கு முன்பிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன.  ★ சங்க இலக்கியத் தில் கொங்குநாடு என்ற பெயர் கூறப்படவில்லையானாலும் கொங்கர் பற்றிய குறிப்பு நிறைய வருகின்றன.  ★ கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் கொங்கு நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. ★  கொங்குநாட்டு எல்லைப்புறங்கள் முழுவதும் மலைகள் சூழ்ந்து தனித்தன்மை பெற்று விளங்கின.  ★ கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் கொங்கு நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்குநாடு பெயர்க்காரணம் : ★ கொங்குநாட்டிற்கு இப்பெயர் வந்தது பற்றிப் பல கருத்துகள் நிலவி வருகின்றன.  ★ பூக்களின் 'தேன்' தான் 'கொங்கு' என்ற பெயருக்குக் காரணம் என்பர். இது பெரும்பாலோருடைய கருத்து.  குணக்கு நாடுதான் திரிந்து கொங்குநாடு ஆயிற்று என்பர் டாக்டர் கி. நாச்சிமுத்து அவர்கள். இதற்கு ஆதாரமாகத் துளு மொழியில் கிழக்குத் திசையைக் குறிக்கும் சொல் ‘கொன் என்பதனை அவர் எடுத்த...

நற்றிணை பாடல் - 2

Image
நற்றிணை (Narrinai) நற்றிணை பாடல் - 2 By. Tamil Literary Encyclopedia, நற்றிணை (Narrinai) நற்றிணை பாடல்:  2 .  பாடல் வகை : பாலை பாடல் பாடியவர் : பெரும்பதுமனார் பாடப் பட்ட இடம் : உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. பாடல் : "அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,  மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! 10 பொருள் உறை : சுரமோ, ஆழ்ந்துபடக் கிடந்த பெரிய குளிர்ச்சியையுடைய குன்றத்து; தழைத்த வலிய ஈத்த மரங்களையுடைய காற்றுச் சுழன்று வீசும் காட்டின் கண்ணே; நெறிகொண்டு செல்லும் மக்களுடைய தலையை மோதியதனாலே குருதி படிந்த சிவந்த மாறுபட்ட தலையையுடையனவும்; இரத்தம் பூசிய வாயையுடையனவுமாகிய பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்; இம் மாலைப் பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரலின் தூஊகளை நிமிர்ந்து நோக்கா நிற்கும் இண்டங் கொடியுடனே ஒருச...

நற்றிணை பாடல் - 1. குறிஞ்சி

Image
நற்றிணை (Narrinai) நற்றிணை பாடல் - 1  By. Tamil Literary Encyclopedia, பாடல் வகை : குறிஞ்சி பாடல் பாடியவர் : கபிலர் பாடப்பட்ட இடம் : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.  பாடல் : நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்; என்றும் என் தோள் பிரிபு அறியலரே' தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, புரைய மன்ற, புரையோர் கேண்மை;.  நீர் இன்று அமையா உலகம் போலத் தம் இன்று அமையா நம் நயந்தருளி, நறு நுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! பொருள் உறை : தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையுடையவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக் குறைபாடிலர்; அத்தகைய மேதக்கோருடைய நட்பு; தாமரையின் தண்ணிய தாதினையும் மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போலத் திண்ணமாக மேதக்கன ஆதலின்; அவர் நீரையின்றியமையாத உலகியல் போலத் தம்மை யின்றியமையாத நம்பால் முன்பு விருப்பமிக வைத்தருளி; பின்பு பிரிதலால் நம் நறிய நுதல் பசலையூர்தற்கு அஞ்சி; செய்வதறியாராய்த் தடுமாற்றமடைவாரோ?; அங்ஙனம் செய்யார்க...

சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்:

Image
சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்..! Tamil Literary Encyclopedia, சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்..! 1. சங்க காலமும், சங்ககால நூலும் . 2. எட்டுத் தொகை நூல்கள் யாது ? 3. எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் . 1. சங்க காலமும், சங்ககால நூலும் : ★ கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். ★ இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர். ★ எட்டுத்தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம். " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை" ★ இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். 1.அகப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், 1.நற்றிணை (Narrinai) 2.குறுந்தொகை (Kurunthokai) 3.ஐங்குறுநூறு (Ainkurunooru) 4.கலித்தொகை (Kalithokai) 5.அகநானூறு (Agananooru) ஆகிய ஐந்து ...