கொங்குநாடு பற்றிய குறிப்புகள்..!

References about Kongunadu ..!

கொங்குநாடு பற்றிய குறிப்புகள்..!

By. Tamil Literary Encyclopedia,


கொங்குநாடு:

★ கொங்குநாடு பற்றிய குறிப்புகள் சுமார் 2000 ஆண்டு கட்கு முன்பிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன. 

★ சங்க இலக்கியத் தில் கொங்குநாடு என்ற பெயர் கூறப்படவில்லையானாலும் கொங்கர் பற்றிய குறிப்பு நிறைய வருகின்றன. 

★ கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் கொங்கு நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.

★  கொங்குநாட்டு எல்லைப்புறங்கள் முழுவதும் மலைகள் சூழ்ந்து தனித்தன்மை பெற்று விளங்கின. 

★ கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் கொங்கு நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.


கொங்குநாடு பெயர்க்காரணம் :

★ கொங்குநாட்டிற்கு இப்பெயர் வந்தது பற்றிப் பல கருத்துகள் நிலவி வருகின்றன. 

★ பூக்களின் 'தேன்' தான் 'கொங்கு' என்ற பெயருக்குக் காரணம் என்பர். இது பெரும்பாலோருடைய கருத்து. 

குணக்கு நாடுதான் திரிந்து கொங்குநாடு ஆயிற்று என்பர் டாக்டர் கி. நாச்சிமுத்து அவர்கள். இதற்கு ஆதாரமாகத் துளு மொழியில் கிழக்குத் திசையைக் குறிக்கும் சொல் ‘கொன் என்பதனை அவர் எடுத்துக்காட்டுகிறார்.


★ பயனற்ற நிலம் என்ற வகையில் கொன் என்ற அடிப் படையில் கொங்கு வந்தது என்று கொள்வாரும் உண்டு. 

★ திரு. ஒய்.சுப்புராயலு அவர்கள் இதுபற்றிக் கூறும்போது "மைசூர் மாவட்டத்தில் உள்ள தலைக் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஆட்சி செய்த கங்க அரசர்களின் குலமுதல்வனான கொங்குணிவர்மன் என்பவனால் இப்பெயர் வந்தது என்கிறார். 

★ கொங்குணிவர்மனின் குலத்தால் கொங்குநாடு பெயர் பெற்றதாகலாம். கங்க அரசர் களைத் தான் கொங்கர் என்று சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 

★ கொங்கு நாட்டுப் பெயர் பற்றிப் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் சுப்பராயலு அவர்கள் கருத்துதான் ஒப்புக்கொள்ளக் கூடியதாக உள்ளது.


கொங்குநாட்டின் எல்லைகள் :

கொங்கு நாட்டு எல்லைகளைப் பற்றிப் பிற்கால நூல்கள் குறிப்பிடுகின்றன.

"வடக்குத் தலைமலையாம் வைகாவூர்   தெற்கு குடக்கு வெள்ளிப் பொருப்புக்குன்று கிழக்கு கழித்தண்டலை சூழும் காவிரி சூழ் நாடா குழித்தண்டலையளவும் கொங்கு"

★ வடக்கெல்லை தலைமலை, 

★ தெற்கு வைகாவூர்,

★மேற்கெல்லை வெள்ளிமலை (வெள்ளியங்கிரி), 

★ கிழக்கு குளித்தலை 

என்று இந்த பாடல் மூலம் கொங்கு நாட்டின் எல்லைப் பற்றி அறிகிறோம். சிலபாடல்களில் வடக்கெல்லை பெரும்பாலை என்றும் கூறப் படுகிறது.











Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!